நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 164 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
வேதாரணியம் ஜூன் 14
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.
தமிழ்நாடு அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள் உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 71 பயனாளிகளுக்கு மாதம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை விதவை உதவிதொகை மாற்றுத்திறனாளி உதவிதொகை வருவாய் துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை பேரிடர் நிவாரணமாகவும் 2 பயனாளிகளுக்கு ரூ.20000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவினையும் 15 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாற்றம் மற்றும் நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் தோட்டக்கலைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.49353 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் மா கொத்தவரை போன்றவைகளையும் வேளாண்மைத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.33098 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.2250 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பீட்டில் தாது உப்புக் கலவைகளையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.44508 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும்மாவட்ட வழங்கல் துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும் மகளிர் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.40000 மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையினையும் என மொத்தம் 164 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஆத்மா குழுத்தலைவர் என்.சதாசிவம் வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் உதயம்முருகையன் வேதாரண்யம் ஒன்றியகுழு தலைவர் திருமதி.கமலா அன்பழகன் வருவாய் கோட்டாட்சியர் மதியழகன் வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

