தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மேல்பகுதி அருந்ததியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்கிழமை மதிய கொடை நடைபெற்று சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கொடை விழாவையொட்டி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்து, சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.
விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, குணா பாஸ்கர், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் செல்வராஜ், தர்மகர்த்தா சந்தனபால், பொருளாளர் மணிகண்டன், கணக்காளர் காளிதாஸ், அறிவிப்பாளர் வீரையா, கௌரவ ஆலோசகர் சக்திவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

