அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும், குற்றத் தடுப்பு குறித்தும் காவல்துறை மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
விக்கிரமங்கலம் வணிகர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் 07.03.2021 அன்று விக்கிரமங்கலம் கடைத்தெருவில் காவல்துறையின் ஒத்துழைப்புடன் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்கள் திறந்து வைத்து சேவையை துவங்கி வைத்தார். இந்த கேமரா 24× 7 கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் விதமாக இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது . மேலும் இவை காவல்துறையின் விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்
அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் திருட்டு முதலிய குற்றங்களை கண்காணிக்க மற்றும் தடுக்க இயலும் , விபத்துக்களை கண்காணிக்க, மேலும் எவ்வித குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாவட்டம் முழுவதையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொணடு வர இயலும்.
எந்த விதமான விபத்துக்கள், குற்றங்களையும் கண்டுபிடிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் உதவியாக உள்ளதாகவும், பெண்களை குழந்தைகளை பாதுகாக்கும் விதமாகவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ,விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரத் குமார் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.


