அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி , ராஜேந்திரன் மற்றும் சேகர் அவர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் பணி புரிகின்ற மகளிர் அனைவரும் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி அதிகாரிகள் , காவலர்கள் ,அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள் ,மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகளிர் தினத்தை கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடினார்கள்.


