தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது.
கொடைவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு அலங்காரபூஜை பஜனையுடன் நடைபெற்று 7ம் தேதி மாகாப்பு பூஜையும் 8ம் தேதி மாலை தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சியும்; நடைபெற்றது. தொடர்ந்து இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, கமிட்டி உறுப்பினர்கள் கணேஷ் காந்தகுமார், அருணகிரி, சிவசுந்தர், பெரியசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

