நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 241 பயனாளிகளுக்கசுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,69,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் மே 9
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 241 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,69,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மகளிர்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி கிடைக்க பெறாதவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து “தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து கூட்டுநீர் திட்டம் வழங்கவும், மேலும் நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகளில் பேருந்து நிலையம், வேதாரண்யம் நகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம், வேளாங்கண்ணி, அக்கரைபேட்டை இடையே மேம்பாலம் கட்ட நிதி, மகளிர் திட்டத்தின் கீழ் நிதி போன்றவைகளை பெற்று வளர்ச்சிபாதையில் செல்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அதனைத்தொடர்ந்து இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டத்தில் 148 பயனாளிகளுக்கு ரூ.1,70,000 மதிப்பீட்டிலும், கீழ்வேளுர் வட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.23,000 மதிப்பீட்டிலும், திருக்குவளை வட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பீட்டிலும், வேதாரண்யம் வட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பீட்டிலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, முதிர்கன்னி உதவிதொகை, என மொத்தம் ரூ.2,69,500 மதிப்பீட்டில் 241 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா , நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நாகப்பட்டினம் நகர மன்ற துணைதலைவர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த?மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

