நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் மே 9
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் த?ஜெ.முகமது ஷா நவாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐவநல்லூர் ஊராட்சி சவேரியார் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மானிய நிதியின் கீழ் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், அந்தணப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை மற்றும் ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ஆழியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் என மொத்தம் ரூ.72.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களின் நலனை கருதி மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி, போன்ற பல்வேறு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி 1 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்த உள்ளார்கள் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் , மாவட்ட ஊரக வளர்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.ஜி.சேகர், நாகப்பட்டினம் ஒன்றியக்குழு தலைவர் வே.அனுசுயா, நாகப்பட்டினம் வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவர் என்.ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.சரபோஜி, ஐவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ப.மகேஸ்வரி. அந்தணப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கிருஷ்ணவேணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ரேவதி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

