தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தில் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரில் வட்டக்கோவில் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பல்வேறு வகையான பழங்கள் குளிர்பானங்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மப்பாண்டியன், மற்றும் கருணா மணி அல்பட், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

