தூத்துக்குடி அம்பேத்கார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அம்பேத்கார் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி வக்கீல் அணி அர்ஜீன் தலைமை வகித்தார். நீலம் பிரதீப் ஜேசுதாஸ் சுதாகர், சரவணன், வக்கீல் உஷா சுரேஷ். வலசை வெயிலுமுத்து, மைக்கேல்ராஜ், நவராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிறந்தநாள் விழாவை தொடங்கி வைத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில் அம்பேத்கார் சட்டமாமேதையாக திகழ்ந்தது மட்டுமின்றி பல்வேறு வகையில் எழுச்சியூட்டும் வகையில் பல செயல்பாடுகளை செய்தததின் மூலமாக அவருடைய புகழ் இன்று வரை நிலைத்து நிற்கிறது என்று பேசினார்.
விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி பொது செயலாளரும் சென்னை உயர்நீதிமன்றம் வக்கீல் பார்வேந்தன், திராவிடர் விடுதலை கழகம் பரப்புரை செயலாளர்; பிரபாகரன், தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர். வக்கில் செங்குட்டுவன், தமிழ்நாடு புதுச்சேரி ஒருங்கிணைந்த வழக்கறிஞர் கூட்டமைப்பு செயலாளர் ராஜேஷ்குமார், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர் கூடலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் 7 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினார். பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. விழாவில் கவுன்சிலர் நாகேஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து,
விழாவிற்கான ஏற்பாடுகளை யோகேஷ், கதிர்வேல், ரஞ்சித் பாண்டியன், சுரேஷ். நிலோபர், பத்மாவளவன், காலி பவுன் ராஜ், கணேஷ், கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

