நாகப்பட்டினம் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 16
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் தமிழ்நாடு மீன் வளர்;ச்சி கழக நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள் இன்றைய தினம் தொடங்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படும்.
இந்நிகழ்வின்போது நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர மன்ற துணைத் தலைவர் எம்.அர்.செந்தில்குமார், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளர் பி.விஜய்கார்த்தி, 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திர.பிரதீப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக நாகை
மாவட்ட. செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

