மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். தாளமுத்துநகர் மெயின் ரோடு ஜோதிபாஸ்நகர் ஆகிய இரு இடங்களில் தண்ணீர் பந்தலை கனிமொழி எம்.பி, திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நொங்கு, தர்பூசனி, செவ்வாழை கற்புரவள்ளி, ரஸ்னா, ரோஸ்மில்க், லெமன் ஜுஸ், உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி,
தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ஆரோக்கியமேரி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், சக்திவேல், ஜேசுராஜா, கிளைச்செயலாளர்கள் காமராஜ், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், மற்றும் மகாராஜா, கௌதம், அங்காளஈஸ்வரி, ராஜேந்திரன், நெல்சன், மிக்கேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

