தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை – நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் ஏப்ரல் 11
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை – நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அதிநவீன மிண்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
தமிழ்நாடு அரசின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் 20.03.2023-அன்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கான நிதிநிலை அறிக்கை 21.03.2023-அன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை ரீதியாக மானிய கோரிக்கையின் மீதான விவாதமும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-2024-ஆம் ஆண்டு அறிவிப்புகள் மற்றும் மானிய கோரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். மேற்படி செய்தி துறை அமைச்சர் மானியக் கோரிக்கை மீதான பதிலுரை வழங்கும் நிகழ்வினை நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மிண்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

