தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் தூத்துக்குடி ராஜமன்னார் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனு வழங்கிய அவரை அங்கேயே அமர வைத்து ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், செந்தில்குமார், முன்னாள் வட்டச்செயலாளர் மாரியப்பன், மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலைஞர் வழியில் அயராது உழைக்கும் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவர் தான். என்பதை இந்தியா முழுவதும் நிரூபித்து வருகிறார். அதனால் சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பில் நம் 1 முதல்வர் ஸ்டாலின் என்று வந்ததை கேள்விபட்டிருக்கிறேன். அதே வழியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறைகேட்பு மனு அமைச்சர் பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைக்க பெற்றதையடுத்து கோரிக்கை வைத்தால் நிறைவேற்றி தருவார்கள் என்று பலரும் கூறியதின் பேரில் மனு அளித்தேன். என்னை இங்கே அமரவைத்து 1 மணிநேரத்தில் சைக்கிள் வழங்கியதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். முதல்வராக உள்ள ஸ்டாலின் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் கான்பிரன்ஸ் கால் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரங்களையும் கண்டறிந்து பேசியபோது பெண்சிங்கம் என்று கீதாஜீவனுக்கு பட்டம் சூட்டி புகழாரம் செய்தார்கள். அதன்பின் தூத்துக்குடிக்கு முதல்வராக வந்து கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை திறப்பின் போது அதே வார்த்தையை இரண்டாவது முறையாக கூறினார் முதல்வர் சென்னையில் சமூகநலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் 3வது முறையாக பெண்சிங்கம் என்ற வார்த்தையை முதல்வர் கூறினார். அதற்கேற்றாற்போல் இந்த வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பணிகள் இது போல் பல நடைபெற்றுள்ளன. என்னை போன்ற ஏழை எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

