தூத்துக்குடி
மாநகராட்சி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது பெருகி வரும் ஜனத்தொகைக்கேற்ப மாநகரில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 10 ஆண்டுகளாக அந்த பணி நடைபெறாமல் காட்சி பொருளாக இருந்துவந்தன. இதை முறையாக செயல்படுத்தி மக்கள் நலனில் அக்கறையோடு பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் நடைபெற்று வருகின்றன.
இரவு பகல் பாராமல் அனைத்து பகுதிகளிலும் எல்லா பணிகளும் நடைபெறுகிறது. அதே போல் தூத்துக்குடி பிரதான சாலையான தாமோதரநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. அதை விரைவுப்படுத்தி முடிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் குண்டும் குழியுமான சாலையை முழுமையாக சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் வகையில் ஒப்பந்தகாரர்களோடு சென்று பார்வையிட்டார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் எங்களை பொறுத்தவரையில் மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டு பகுதிகளும் முக்கியமானவைகள் தான் இதில் பாரபட்சமில்லாமல் எல்லா பகுதிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்க வேண்டிய பணிகள் அனைத்தும் முழுமையாக செய்து கொடுப்போம் குறிப்பாக முதல்கட்ட பணியாக கல்லூரி பள்ளிகள் கோவில் தேவாலயம் தர்கா முக்கியமான மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்கள் நலனை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறோம் அதனடிப்படையில் இந்த தாமோதரநகர் சாலையில் பள்ளி மருத்துமணை திருச்செந்தூருக்கு செல்லும் ஆன்மீக பக்தர்கள் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக முடிந்ததும் நல்ல முறையில் இன்னும் ஓருவாரத்தில் சாலைகள் அமைத்து கொடுக்கப்படும். என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் கோhட்டுராஜா, மேயரின் உதவியாளர்கள் பிரபாகர், ஜோஸ்பர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

