ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றுதல் செய்த ஆர்.கே.நகர் காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் திரு.ஜுலியஸ் சீசர் மேற்பார்வையில், H-6 ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.மகாவிஷ்ணு தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படையினர் மார்ச் 04ம்தேதி அன்று மாலை கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, அருகே கண்காணித்தபோது, அவ்வழியே வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி விசாரணை செய்து சோதனை செய்தபோது, ஆட்டோக்களில் கஞ்சா கடத்தி வந்த ராஜாமுகமது, வ/26, தண்டையார்பேட்டை, யாசர் அராபத், வ/28, , கொடுங்கையூர், சரவணன், வ/31, கொடுங்கையூர், முகமது ரியாஸ், வ/23, தண்டையார்பேட்டை, ஜெய்னூலாபுதின், வ/20, தண்டையார்பேட்டை, சஞ்சய், வ/19, தண்டையார்பேட்டை ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

