நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு 208 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.1,15,0000 மதிப்பிலான நிதியுதவிகள் மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு; ரூ.1,50,000 மதிப்பில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 03
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு 208 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.1,15,0000 மதிப்பிலான நிதியுதவிகள் மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு; ரூ.1,50,000 மதிப்பில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன்,நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 208 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.1150000 மதிப்பிலான நிதியுதவிகளும் இதில் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழ்மை மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கும்பயன் வழங்கப்பட்டது. இதில் பட்டம் படித்தவர்கள் 20 நபர்களுக்கும் ரூ.50000 வீதமும், பட்டப்படிப்பு நிறைவு செய்யாதவர்கள் 6 நபர்களுக்கு ரூ.25000 வீதமும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு தலா ரூ.15,000 மானியத்தில் மொத்தம் ரூ.1,50,000 மதிப்பில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலஅலுவலர் க.அன்பரசி, நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்(கீழ்வேளுர்) அ.முகமது சாதிக் மற்றும் அரசு அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

