நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 1
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குருமணங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், இருக்கை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வெண்மணி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், குருமணங்குடி ஊராட்சியில் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2.02 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுது நீக்கும் பணிகள் நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குருமணங்குடி ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ரூ.1.37 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள், கூத்தூர் ஊராட்சியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் ஈமகிரியை மண்டபம் கட்டும் பணிகள், இருக்கை ஊராட்சியில் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிப்பறை கட்டடம் கட்டும் பணிகள், வெண்மணி ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள், ரூ.6.25 இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.4.66 இலட்சம் மதிப்பீட்டில் சுடுகாடு கூரை மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குருக்கத்தி தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞசுக்குழாய் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூத்தூர் ஊராட்சியில் ரூ.0.11 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சுக்குழாய் அமைக்கும் பணிகள், பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள், தேவூர் ஊராட்சியில் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில் வார சந்தைக்கான கட்டடம் கட்டும் பணிகள், கிள்ளுக்குடி ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், 15 ஆவது மானிய நிதியின் கீழ் பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் மற்றும் நூலகத்தில் ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள், சாட்டியக்குடி ஊராட்சியில் ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மானிய நிதியின் கீழ் 64 மாணலூர் ஊராட்சியில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கிள்ளுக்குடி ஊராட்சியில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டிலும் ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், பட்டமங்கலம் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.சேகர், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜகோபால், இராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

