நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 31
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் க.செந்தில்குமார் த/பெ கணேசமூர்த்தி என்பவர் ரூ.1 இலட்சம் மானிய மதிப்பீட்டில் காளான் வளர்ப்பு செய்யப்படும் குடிலையும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உ.ராமசந்திரன் த/பெ உலகநாதன் என்பவர் ரூ.4000 மானிய மதிப்பீட்டில் மெரிகோல்டு பயிரிடப்பட்டுள்ளதையும், யா.ஜான்வனத்தையன் த/பெ யாகூப் என்பவர் ரூ.6000 மானிய மதிப்பீட்டில் கொத்தவரை பயிரிடப்பட்டுள்ளதையும், ரா.சிவசங்கர் த/பெ ராமலிங்கம் என்பவர் ரூ.4000 மானிய மதிப்பீட்டில் மிளகாய்,கத்தரி நாற்றுகள் பயிரிடப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

