தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்குவது மேயர் ஜெகன் பெரியசாமி சபதம்
தூத்துக்குடி தமிழகத்தில் கடைசி மாவட்டமான முத்துநகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்கு மதி சார்ந்த தொழிலதிபர்கள் வந்து செல்லும் வகையில் 4 கட்டமைப்புகள் சரியாக இருந்து வருகிறது. குறிப்பாக கடல்வழி வான்வழி சாலை வழி இரயில்வே என 3 கட்டமைப்புகள் மாநகருக்குள் இருப்பதால் எதிர்காலத்தில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் தூத்துக்குடி உருவாகி வருகிறது. அதற்கேற்றாற்போல் கட்டமைப்பு பணிகளை செய்து கொடுக்கும் கடமை மாநகராட்சிக்கு உள்ளது. இதை உணர்ந்து பணியாற்றும் வகையில் உள்ளாட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மாநகராட்சி மேயராக கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் மேயர் ஜெகன் பெரியசாமி அனைத்து பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2ம் கேட் பகுதியில் இருந்த இரயில் நின்று சென்று பயணிகளை ஏற்றி இறக்கும் நடைபாதை இருந்து வந்தது. அதை தற்போது மீளவிட்டான் ரோட்டில் உள்ள புதிய பேருந்துநிலையம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது இந்த பகுதியில் உள்ள நடைபாதை உள்ளிட்ட தேவையில்லாதவற்றை இரயில்வே துறை அகற்றிய போது அப்பகுதியில் உள்ள கால்வாய் உடைப்பு குடிநீர் பைப் உடைப்பு சாலை சேதம் போன்றவற்றை ஏற்படுத்தி விட்டனர். அதை மாநகராட்;சி முழுமையாக சீர் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்றதை பார்வையிட்டு சரி செய்யப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதன்பின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சரும் கழகத்தலைவருமான தளபதியார் எண்ணங்களுக்கேற்ப பணிகளை செய்ய வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு முதலமைச்சர் ஓருநாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் இந்தநாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வழியில் வந்த நாங்கள் இந்த மாநகராட்சி எல்லா வகையிலும் வளர்ச்சியடைய வேண்டும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்;சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறோம். கடமைக்கு பணியாற்றிவிட்டு செல்வதற்கு இந்த பொறுப்புக்கு நான் வரவில்லை. என்மீது நம்பிக்கை வைத்து தளபதி அமர வைத்துள்ள பணியை சிறப்பாக செய்து இன்றைய தலைமுறை மட்டுமின்றி இன்னும் பல ஆண்டுகள் கடந்து பின்பும் வரக்கூடிய மக்கள் தொகையை என்னிப்பார்த்து அதே போல் வாகன போக்குவரத்து அதிகம் வரும் என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்;சி பகுதி முழுவதும் ஒழுங்குப்படுத்துவதும் சிரமமின்றி மக்கள் செல்வதற்கும் ஏற்ற வகையில் சாலை கட்டமைப்புகளை செய்து வருகிறோம். அதே போல் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் எல்லா பகுதிகளிலும் பசுமையான சூழ்நிலைகளை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக நடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு புதிதாக பல பூங்காக்கள் அமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்ச்சியோடு கவலைகளை மறந்து பொழுது போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. பல பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது இரவை பகலாக்கும் வகையில் புதிய மின்விளக்குகள் மாநகர் பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது எல்லா பகுதிக்கும் புதிய மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதகாலத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் அதே போல் பேருந்துநிலையம் வணிக வளாகம் வாகன காப்பகம், திறக்கப்படும் இதில் பல மாநகராட்;சி இடங்களையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதையும் ஆய்வு செய்து பல இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த பணியும் தொடரும் வழக்கமாக பணியாற்றிய மேயரை போல் இல்லாமல் எல்லா தரப்பினரும் நன்மை அடைந்து எதிர்கால நலன் பற்றி சிந்தித்து பணியாற்றிய மேயராக இவர் இருந்தார் என்று சொல்லும் வகையில் எனது பதவிகாலத்தில் இருக்கும் என்று கூறினார்.

