தூத்துக்குடி.
அதிமுக அமைப்பு ரீதியாக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்றதை தடை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இருதரப்பு வழக்கறிஞர்களின் நேரடி வாதங்களையும், எழுத்துப்பூர்வமான ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதி குமரேஷ்பாபு, ஓ.பி.எஸ்.தரப்பினர் மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனால் முறையாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மார்க்கெட் சிக்னல் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தும் எதிர்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் ஞாயம் ரோமால்ட், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்ராஜ், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், சிறுபான்மை பிரிவு அசன், கிழக்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், அசரியான், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, முருகேசன், மனோகர், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ், சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி நடராஜன், ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

