தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக
2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக
வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:
தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை
சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”
தூத்துக்குடி மார்ச், 20
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்
2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக
பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில்
தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை
சார்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார்,
அதிநவீன மின்னணு வாகனம் ஆப்பரேட்டர் ராமச்சந்திரன் மற்றும், தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாளை 21/03/2023 காலை 10 மணி அளவில்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம்
தமிழக
வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளை
வீடியோ படக்காட்சி மூலம் நாளை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியை நாளை அனைத்து தரப்பு பொதுமக்களும் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி பொதுமக்கள் வரவேற்பதுடன் தமிழக அரசுக்கும், தமிழக செய்தி மக்கள் தொடர்புக்கு, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறைக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு
M. கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்

