தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவேரியார்புரம் ஊர்மக்கள் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய்கள் பரவுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இதை போக்கும் வகையில் புதிய மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும் என்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற நிதி 10 லட்சம் மதிப்பில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமையில் பூமி பூஜையுடன் தொடங்கி பூர்வாக பணிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், ராயப்பன், மகளிர் அணி ரூபி, வளர்மதி, சமத்துவமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், மற்றும் கௌதம், உள்பட டி.சவேரியார்புரம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஓருவர் கூறுகையில் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாமல் இருந்தது. அதனால் பல்வேறு பாதிப்புகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர். எத்தனையோ தலைவர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால் யாரும் எங்கள் கோரிக்கையை ஏற்று எந்த பணியையும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததை மீண்டும் எங்கள் பகுதி மக்களுடன் இணைந்து ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு நிதி ஓதுக்கீடு செய்து இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுவதும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவரை எங்களது ஊர்மக்களின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம் என்று தெரிவித்தனர்.

