தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டி மாப்பிள்ளையூரணி கணபதி நகரில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆணைப்படி ஆண் பெண்களுக்கான கபாடி போட்டியில் இரண்டாம் நாள் இறுதிப்போட்டியை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்;சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் ரூ20ஆயிரம், இரண்டாம் அணிக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் ரூ 15 ஆயிரம், மூன்றாம் அணிக்கு பொன்முத்துபாண்டி பிரதர்ஸ் முத்துவேல் பாசறை கணபதி நகர் இளைஞர் அணி சார்பில் ரூ 8 ஆயிரம், நாண்காம் அணிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா ரூ 6ஆயிரம், ஐந்தாம் அணிக்கு திமுக கிளைச்செயலாளர் செய்யது முகம்மது ரூ3ஆயிரம், ஆறாம் அணிக்கு திமுக துணை கிளைச்செயலாளர் மகாராஜா ரூ3ஆயிரம், ஏழாம் அணிக்கு ஷேக் மைதீன் ரூ 3 ஆயிரம், எட்டாம் அணிக்கு செல்வம் ஸ்டோர்ஸ் ரூ 3 ஆயிரம், பெண்கள் அணிக்கு முதல்பரிசு சின்னத்துரை ரூ 8 ஆயிரம், இரண்டாம் பரிசு கிங்ஸ்டன் ரூ 6ஆயிரம், 3ம் பரிசு முத்துக்குமார் ரூ 3 ஆயிரம், 4ம் பரிசு பொன்பாண்டி பிரதர்ஸ் ரூ3 ஆயிரம், வெற்றி பெற்ற அணிக்கு சிறப்பு பரிசாக ஆண்களுக்கு தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரூ 25 ஆயிரம், அனைத்து அணிகளுக்கும் பரிசு கோப்பையும், சிறந்த அணிகளுக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
விழாவில் ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், திமுக அவைத்தலைவர் பிரைட்டன், முத்துகிருஷ்ணன், ரவீசந்திரன், பட்டுகிருஷ்ணன், முருகன், இளையராஜா, ஜேசுராஜ், முருகன், மாடசாமி, கவி அரசன், முத்துராஜ், கோபி, அருள்ராஜ், செல்வம், மணிகண்டன், கிருஷ்ணன், கோட்டைசாமி, மாரிக்குமார், காளீஸ்வரன், கார்த்திக்ராஜா, தங்கமாரியப்பன், மணிகண்டன், கமல், செல்வகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொன்முத்துபாண்டி பிரதர்ஸ் நினைவு கபாடி குழு முத்துவேல் பாசறை கபாடி குழு மற்றும் கணபதி நகர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

