தூத்துக்குடி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர 6 வது வார்டு மற்றும் 7 வது வார்டு ஊர் பொதுமக்கள் மற்றும் என்எம்சி கபாடி குழு இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா கோயில்பிள்ளைவிளை அமரர் ஆரோக்கியராஜ் திடலில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கபாடி போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் தலைமையேற்று கபாடி போட்டியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், 1972ல் அதிமுகவை துவக்கிய நாள் முதல் தேர்தலிலேயே வெற்றிக் கொடி நாட்டி அவர் மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நன்மைகளை செய்ததின் மூலம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அவர் வழியில் கட்சியை தலைமையேற்று ரானுவ கட்டுபாட்டுடன் வழிநடத்தி முதலமைச்சராக அவர் மறையும் வரை பணியாற்றி என்னற்ற திட்டங்களை மக்களுக்காக வாரி வழங்கினார். 3வது தலைமுறையாக முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். மக்கள் நலன் தான் முக்கியம் என்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைகளை தாங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார். எதிர்வரும் காலங்களில் அதிமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் உங்களுக்காக எந்த உதவி என்றாலும் என்னை எப்போதும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்காக உழைக்க நாங்கள் உள்ளோம். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்று பேசினார். பின்னர் நிறைவு பெற்ற கபாடி போட்டியில் சி.த.செல்லப்பாண்டியன் முதல்பரிசும் மற்றும் 8 போட்டிகள் வரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.


விழாவில் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் (பொ), வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், அரசு போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்
விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் அம்பைமுருகன், முன்னாள் வட்ட செயலாளர் பாக்கியராஜ், இளைஞர் பாசறை செயலாளர் கோயில்பிள்ளை விளை தெய்வகுமார், வேல்முருகன், பாலமுருகன், வட்ட பிரதிநிதி பிரகாஷ் ராஜ், மற்றும் ஆரோக்கியராஜ், அசோக் ஆகியோர் செய்திருந்தனர்

