• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
March 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர்   டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை

மாவட்ட ஆட்சித்தலைவர்

டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

 

நாகப்பட்டினம் மார்ச் 1

 

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

இம்முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,கோமாரி நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும், இது காற்று மற்றும் தண்ணீர் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடர்த்தியாகவும், அடர்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே, இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இன்றைய தினம் நாகப்பட்டினம் வட்டம் குறிச்சி, ஆய்மழை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.இம்முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் எம்.விஜயகுமார், உதவி இயக்குநர் ஹசன் இப்ராகிம் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம்

Next Post

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி- தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Next Post
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி- தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி- தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In