வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:
*வீட்டு உபயோக சிலிண்டர் இன்று 50 ரூபாய் உயர்த்தி ரூ1068 இருந்து 1,118 ஆக உயர்த்தி ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது ஒன்றிய மோடி அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ 400க்கு விற்ற சிலிண்டர் இன்று ரூ 1,118.இது தான் ஒன்றிய மோடி அரசின் சாதனை*
*மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசுக்குகாக மக்கள் அல்ல*
*இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லையேல் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபடும்*
*இவ்வாறு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்*

