தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
வேதாரணியம் பிப்ரவரி 28
கடந்த 2011 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் அத்வானி ரத யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் ஆலம்பட்டி கிராமத்தில் கவுண்டன் ஆற்றுப்பாலத்தின் அடியில் வெடிகுண்டு வைத்து அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதை முறியடிக்கப்பட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையம் குற்ற எண் 237/2011
வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கின் எதிரிகள் 1.போலீஸ் பக்ருதீன் 2.பிலால் மாலிக் 3.தென்காசி ஹனிபா 4.அப்துல் ரகுமான் 5.இஸ்மத் 6.ஹக்கீம் (இறந்துவிட்டார்)
7.சையதுசகாபூதீன் 8.தர்வீஸ் மைதீன் 9.ஜாகிர் உசேன் 10.முஸ்தபா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். இவ்வழக்கின் 11 வது எதிரியான நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.இந்நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பிடியாணையை நிறைவேற்ற முடியாமல் உள்ளது.எனவே மேற்படி தலை மறைவு எதிரியான அபுபக்கர் சித்திக்
(தோப்புத்துறை)
என்பவரை வரும் 10.04.2023 ம் தேதி காலை 10.30 மணிக்குள்
பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தன் விளக்கத்தை தெரிவிக்கும் பொருட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவின்படி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் பட்சத்தில் மேற்படி தலைமறைவு எதிரியான அபூபக்கர் சித்திக் மீது 82
கு.வி.மு.ச படி
விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்ற மேலாண்மை தங்கிய நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நோட்டீசை தோப்புத்துறை அபூபக்கர் சித்திக் இல்லத்தில் தனிப்படை போலீசார் வேதாரணியம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை முன்னிலையில் ஒட்டினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

