நாகப்பட்டினம் பிப்ரவரி 27
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் 12 வழித்தடங்களுக்கு சிற்றுந்து பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித் துறையால் திட்டமிடப்பட்டு 27.02.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில அருகாமையில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரி, மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம், அரசு மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரி, ஆகிய 7 கல்லூரிகளுக்கு 12 வழித்தடத்தில் சிற்றுந்து மூலம் மாணவர்களை அழைத்துச் சென்று கல்லூரி வளாகம், கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், கலையரங்கம், நூலகங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அறிந்து மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 12 வழித்தடங்களுக்கு சிற்றுந்து பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, மாவட்டக் கல்வி அலுவலர் ப.செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் டி.சாந்தி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

