பள்ளிகளுக்கு இடையே நடந்த 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான குடியரசு தின விழா கூடைப்பந்து போட்டியில் செயின்ட் தாமஸ் பள்ளி அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
பிப்ரவரி 18 ,19, 20, ஆகிய மூன்று நாட்கள் வரை திருச்சி தொட்டியம் கொங்கு நாடு கல்லூரியில் 40 அணிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி அணி விளையாடிய முதல் போட்டியில் நீலகிரி அணியுடன் 50 – 04 என்ற புள்ளியிலும், ராணிப்பேட்டை அணியுடன் 49 – 13 புள்ளியிலும், காலிறுதிப் போட்டியில் திருச்சி அணியுடன் 65- 32 என்ற புள்ளிகளிலும், அரை இறுதி போட்டியில் மதுரை அணியுடன் 64 – 44 புள்ளிகளிலும், இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியுடன் 55 – 36 என்ற புள்ளிகளுடன் வெற்றிவாகை சூடியது. போட்டியிட்ட அனைத்திலும் தோல்வியின்றி வெற்றி பெற்ற செயின்ட் தாமஸ் பள்ளி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வன்னம் உள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற செயின்ட் தாமஸ் அணிக்கு நேற்றைய (23/02/23) தினம் பள்ளியில் மாணவ மாணவியர்களின் பாராட்டு விழா நடந்ததது. இவ்விழாவில் தூத்துக்குடி மறை மாவட்டம் மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பையையும், பதக்கங்களையும் மற்றும் சான்றிதழ்களும் கொடுத்து வாழ்த்தினார்கள்.
இந்த வெற்றி விழாவில் பள்ளியின் தாளாளர் ராயப்பன் அவர்கள், பள்ளியின் முதல்வர் திரு ஆஸ்கர் அவர்கள், தொ மெசியன் கூடைப்பந்து ஒருங்கிணைப்பாளர் திரு. வேல்ராஜ், கூடைப்பந்து பயிற்சியாளர் பொன் மாரியப்பன் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. தினேஷ், திருமதி. பாரிஜா திருமதி. எபனேசர் ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்கள்.
மேலும்,
இந்த வெற்றி விழாவில் மாநில அளவிலான வெற்றியை தேடி தந்த மாணவர்களை வழி நடத்தி செல்லக் கூடிய தொமோசியன் அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு வேல்ராஜ் அவர்களுக்கும், பயிற்சியாளர் திரு. பொன்மாரி யப்பான் அவர்களுக்கும் மாணவ மாணவியர் கள் மற்றும் ஆசிரிய பெருமக்களின் கை தட்டல்களுக்கு மத்தியில் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

