தூத்துக்குடி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பிரப் தேவாலய ஆயர் தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், செயலாளர் ஆல்பரின் ராஜேஷ்குமார், பிரப்ரோடு சிஎஸ்ஐ கோள் மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஹென்றி பிரேம்குமார், மாணிக்கம்பாளையம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தராஜ், பெரிய வலசு வியாபாரிகள் சங்க தலைவர் ஜெய் சற்குணதாஸ், உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகளை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு திரட்டினார்.
வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ். வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், தேவலாய சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அஜய், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

