நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாகப்பட்டினம் பிப்ரவரி 23
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம், அகர கடம்பனூர் ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம், ஆனைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.60 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம், குருக்கத்தி ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம், 75-அனக்குடி ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம், மற்றும் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் ஆகிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுவதையும், இருக்கை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.52.48 இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைத்தல், சமத்துவ மயானம் சாலையினை ரூ.39.03 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.62 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், சிகார் ஊராட்சியில் ரூ.28.60 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் மற்றும் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் தெற்குபனையூர் ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மானிய நிதியின் கீழ் பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.39.50 இலட்சம் மதிப்பீட்டிலும், 64 மாணலூர் ஊராட்சியில் ரூ.39.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கிள்ளுக்குடி ஊராட்சியில் ரூ.42.20 இலட்சம் மதிப்பீட்டிலும், தெற்குபனையூர் ஊராட்சியில் ரூ.39.50 இலட்சம் மதிப்பீட்டிலும் ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் ஆனைமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், குருமணங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கீழ்வேளுர் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், இருக்கை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வெண்மணி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜகோபால், இராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

