தூத்துக்குடி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைங்கிணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோடு சிஎஸ்ஐ ப்ரோ மெமோரியல் சர்ச் முன்பு பிராத்தனை முடித்து திரும்பிய கிறிஸ்துவ மக்களிடம் அமைப்பு செயலாளரும்; முன்னாள் அமைச்சருமா தூத்துக்குடி சி த செல்லப்பாண்டியன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அஜய், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

