தூத்துக்குடி, பிப்,19
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவருமான டேனியல்ராஜ் பவளவிழாவையொட்டி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காமராஜர் அண்ணா குரூஸ்பர்னாந்து காந்தி வஉசி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து கேக் வெட்டப்பட்டது பின்னர் 200 பெண்களுக்கு டேனியல்ராஜ் சேலை வழங்கினார்.
மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பவளவிழா நிகழ்ச்சிக்கு விழா ஒருங்கிணைப்பாளர் வில்பிரட் சந்திரசேகர் தலைமை வகித்தார். சென்னை சிஎஸ்ஐ சினட் உறுப்பினர் ஜெபராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட மத்திய கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன் விழா நோக்கவுரையாற்றினார். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன் தொகுப்புரை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சண்முகம் துறைமுக சபை முன்னாள் உறுப்பினர் ஜோ வில்லவராயர் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வக்கீல் சுப்பிரமணிய ஆதித்தன், ஜெயக்குமார், சிவசுப்பிரமணியன், காமராஜ், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜ், வக்கீல் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கம், ஆழ்வை வட்டார தலைவர் விஜயராஜன், ஆறுமுகநேரி நகர தலைவர் ராஜாமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரவீனா, ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் சொரிமுத்து பிரதாபன், காங்கிரஸ் நிர்வாகி பொன்பாண்டி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், தொழிலதிபர்கள் தெய்வநாயகம், சாமுவேல், தனராஜ், பண்ணையார் சமுதாய சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சேகர், பொருளாளர் மணி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் அணி செயலாளர் முத்து, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் 400 பேருக்கு எவர்சில்வர் குடம் நான்கு தையல்மிஷின், கூட்டாம்புளி அன்பு இல்லம் மனநலம் குன்றிய மடத்திற்கு 25 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி
டேனியல்ராஜ் ஏற்புரை வழங்கி பேசுகையில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய நான் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி,ஆர் கலைஞர் ஜெயலலிதா ஆகியோரிடம் நட்பாக பழகியவன் நகர்மன்ற தலைவராக இருந்த காலக்கட்டத்தில் ஆற்றிய பணிகளுக்கு என்மீது அன்பு கொண்டு இந்த விழா எடுத்துள்ளனர். பொது வாழ்க்கையில் எனது பணி தொடரும் என்று பேசினார்.

முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கந்தசாமி, வெங்கடசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மயிலாபரனம், அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் அகஸ்டின், சர்மிளா அருள்தாஸ், செல்லப்பா, அதிமுக பிரமுகர்கள் ரமேஷ் கிருஷ்ணன், ஞாயம் ரோமால்ட், முருகன், சாமுவேல், அந்தோணியப்பா, பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா ராஜேந்திரன், கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழுர் கூட்டுறவு வங்கி இயக்குநர் கணேசன் நன்றியுரையாற்றினார்.

