நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 15
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.
இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்பற வளர்ச்சித்துறை அமைச்சகம். இந்திய அளவில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கழிவறை பராமரிப்பு மேற்கொள்ள தூய்மை இந்தியா திட்டம் போட்டி அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் கீழ்வேளுர் பேரூராட்சி பங்கு கொண்டுள்ளதை தொடர்ந்து கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறையை பொது மக்கள் பங்களிப்பில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த மறு சீரமைப்பில் புதிய பொலிவுடன் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிக்கு தனி கழிப்பறை வசதி. தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் நாப்கின் எரியூட்டும் இயந்திரம், தூய்மைப் பணியாளர் நலன் கருதி கழிவறை தூய்மை செய்யும் இயந்திரம். புகார் மற்றும் கருத்து தெரிவிக்க மின்னனு கருத்து சேகரிப்பு பெட்டி வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இந்த கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு வீதியில் உள்ள பொது கழிவறையை மறு சீரமைப்பபு பணியில் செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கீழ்வேளுர் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர், கீழ்வேளுர் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

