நாகப்பட்டினம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் 2022-2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பொதுப்பிரிவு ஆடவர் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர். அ. அருண்தம்புராஜ், இன்று துவங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 15
நாகப்பட்டினம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் 2022-2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பொதுப்பிரிவு ஆடவர் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ், இன்று துவங்கி வைத்தார்.
2022-2023ஆம் ஆண்டு பொதுப்பிரிவு ஆடவர் மற்றும் மகளிருக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான தடகளம், கையுந்துபந்து, கபடி, இறகுபந்து மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.

மேற்படி விளையாட்டுப் போட்டிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி-2023 மாதம் இறுதியில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெற்றவர்கள் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு பயணப்படி, சிறப்பு சீருடை, தங்குமிட வசதி, உணவு ஆகியன தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ், என தெரிவித்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

