நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.
வேதாரணியம் பிப்ரவரி 14 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 26 நெல் கொள்முதல் நிலையங்கள் நம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. அதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 28.94 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, வாய்மேடு மேற்கு ஆகிய கிராமங்களில் சுமார் 600 விவசாய பெருமக்கள் பயன் பெறுவார்கள். மேலும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எண்ணிக்கை சுமார் 26 ஆயிரம் முட்டைகள் எனவும், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகாமையில் உள்ள ஊரில் சென்று விற்காமல், இங்கு திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்று விவசாய பெருமக்கள் பயனடையலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜன், பாஸ்கர், அட்மா வட்டாரக்குழு தலைவர் உதயம் முருகையன், வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

