நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 172 பயனாளிகளுக்கு வருவாய் துறை சார்பில் ரூ. 1 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவினை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 11
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 172 பயனாளிகளுக்கு வருவாய் துறை சார்பில் ரூ. 1 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவினை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மக்களைத்தேடி அனைத்தும் சேர வேண்டும் என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்க பயனாளிகளை தேர்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு திருமருகல் ஊராட்சி ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் 22 பயனாளிகளுக்கும், நாகப்பட்டினம் நகராட்சி சூரியா நகர்ப்பகுதியில் 60 பயனாளிகளுக்கும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சியில் 90 பயனாளிகளுக்கும் என மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.1,37,20,000 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா இன்றயதினம் வழங்கபட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த விழாவில் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் கு.இராஜன், நாகப்பட்டினம் வட்டாட்சியர் இராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

