நாகப்பட்டினம் பிப்ரவரி 9
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி (30.01.2023) அன்று திறந்து வைக்கப்பட்டு 10 நாட்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் நிறைவு நாளான நேற்று மாணவ – மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினையும், அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்னிசா, துணை இயக்குநர் காசநோய் ப.சங்கீதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

