தூத்துக்குடி.
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜாராம். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவில், குஞ்சன்விளை ஆகும். ராஜாராம் – ராணி தம்பதியரின் மகள் ஷீஜா துணை ஆட்சியராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவங்காடு கிராமத்தைச் சார்ந்த ஹரிகேசவன் ஆனந்தி தம்பதியரின் மகன் பெரிஸ்கர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஷீஜா – பெரிஸ்கர் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நாகர்கோவில், இடலாக்குடி எம்.டி.பி.கம்யூனிட்டி ஹாலில் வைத்து இன்று (10.02.2023) வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருமண விழாவிற்கு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்;த்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமான எம்.ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர் முத்துராமன், முன்னாள் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பத்திரிகையாளர் ராஜு உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காவல் ஆய்வாளர் ராஜாராம் – ராணி தம்பதியினர் மற்றும் அவரது மகன் கிஷோர் ஆகியோர் வரவேற்றனர்.

