தூத்துக்குடி.
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் புதுமைப் பெண் கல்வி உதவித் தொகை திட்டம் இரண்டாம் கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கல்லூhயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கீதாஜீவன், பொன்முடி, நாசர் மற்றும் எம்எல்ஏ-க்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி நடைபெற்ற விழாவில் 572 பேருக்கு புதுமைப் பெண் கல்வி உதவித்தொகையை மாணவிகளுக்கு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செய்து வருகிறார். அதுபோல், இந்த புதுமைப் பெண் கல்வி உதவித்தொகை திட்டம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திட்டமாகும். அனைவரும் இதை பயன்படுத்திக் கொண்டு நல்ல முறையில் கல்வியை தொடர வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும், என்றார்.
விழாவில், சப்-கலெக்டர் கௌரவ் குமார், தாசில்தார் செல்வகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் ரதி தேவி, கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, முன்னோடி வங்கிகளின் மேலாளர் துரைராஜ், திமுக வட்டச்செயலாளர் சுப்பையா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் ஜோஸ்பர் உள்பட பல்வேறு கல்லூரியை சார்ந்த ஆசிரியர்கள், மாணவியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

