நாகப்பட்டினம் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 1
2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகளும் நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது.
மேற்படி விளையாட்டுப் போட்டிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும். பரிசளிப்பு விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு பயணப்படி, சிறப்பு சீருடை, தங்குமிட வசதி, உணவு ஆகியன தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

