நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 1
ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைகள் தொடர்பான மனுக்கள் ஓய்வூதியர்களிடமிருந்தும், ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்தும் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டது. மேலும், ஓய்வூதியம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பப்பட்டது. ஓய்வூதியர்களுக்குரிய குடும்ப நல நிதித் தொகை 20.05.2022 வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் பெறப்பட்ட மனுக்களுக்கான குடும்ப நல நிதித்; தொகை அனைத்தும் மார்ச் 2023-ஆம் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டக் கருவூல அலுவலர் சந்தானகிருஷ்ணன் சென்னை, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலர் ராஜசேகர், முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன்;, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், பல்வேறு ஓய்வூதிய சங்கத்தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள், யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர் மற்றும் ஒருகிணைப்பாளர்; மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

