




மேற்படி சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு
பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .திஷா மித்தல்
உத்தரவுபடி திருப்பூர் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு .ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு
தலைமையில் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் .பாலசுந்தரம், காங்கயம் காவல்ஆய்வாளர் .மனரிகண்டன், மற்றும் வெள்ள கோவில் காவல் ஆய்வாளர் பார்த்திபன், ஊத்துக்குளி சார்பு ஆய்வாளர். முருகேசன், சார்பு ஆய்வாளர்.
கோபால், சார்பு ஆய்வாளர் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்
வேலுச்சாமி மற்றும் மதியழகன் ஆகியோர் அடங்கிய 7 சிறப்பு தனிபடைகள்
அமைக்கப்பட்டு மேற்படி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கிடைத்த தகவலின் படி
நேற்று மாலை 06.00 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் , திருநகர் காலனி,
தனியாருக்கு சொந்தமான குடோன் அருகே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரியாண
மாநிலத்தைச் சேர்ந்த HR 55X8838 என்ற கண்டெய்னர் ஈச்சர் லாரியை கண்டுபிடித்தும்
அதிலிருந்த இந்த வழக்கினுடைய எதிரிகள் . ராகுல்(24), . ரபிக்(24). ஷாகித்(25),
ஷாஜித்(21), இர்சாத்(38), . காசிம் கான்(45), ஆகியோர்களை கைது செய்யப்பட்டது.


எதிரிகள் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து இந்த வழக்கில்
கொள்ளையடிக்க பயன்படுத்திய கண்டெய்னர் ஈச்சர், கொள்ளையடித்த பணம் ரூ.69,120
மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 நாட்டு கை துப்பாக்கிகள் மற்றும் 9
தோட்டாக்கள், 5 மங்கி குல்லா, 5 செட் கையுறைகள், வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர்,
ஆக்ஸிஜன் சிலின்ர்டர், கேஸ் கட்டர், ராடு, ஸ்குரு டைவர், கட்டிங் பிளேடு, ஸ்பேனர்,
நைலான் பெல்ட், பெயிண்டிங் ஸ்பிரே, மேலும் திருடப்பட்ட கா௩ா இயந்திரம் உடைந்த
நிலையில் விஜயமங்கலம், சரலைக்கு அருகிலும், கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கின்
எதிரிகள் பெருந்துறை, ஈங்கூர், நல்லிகவுண்டம்பாளையம் பாலசுப்பிரமணி என்பவருக்கு
சொந்தமான 74 56 ப 0207 என்ற வாகனத்தை திருடிச் சென்று மேற்படி
கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தியும், பிறகு காடா மெஷினை கண்டெய்னர் ஈச்சர்
லாரிக்கு மாற்றி எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேற்படி வழக்கில்
கைது செய்த நபர்களை ஊத்துக்குளி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறைநடுவர் அவர்களின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கில்
திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன், பாராட்டு தெரிவித்தார்.

