தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டுவது குறித்தும், குருஸ்பர்னாந்து சிலைக்கு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், அவைத்தலைவர் கு.நாகராஜன், பகுதி செயலாளர் ரவிந்திரன், துணை செயலாளர்கள் திருமலைக்குமார், பாலகிருஷ்ணன், சந்திரா, பொருளாளர் ஜோதிராஜ், மாநகர பிரதிநிதிகள் தயாளசுந்தர், ராஜ்குமார், கருப்பசாமி பாண்டியன், பூல்பாண்டியன், கருப்பசாமி, வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், பொன்பெருமாள், மந்திரகுமார், பொன்னுசாமி, பத்மாவதி, பாலகுருசாமி, கந்தசாமி, சரவணன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ராமர், அதிஷ்டமணி ரவிந்திரன், மாநகர துணை செயலாளர் கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், மற்றும் அணி நிர்வாகிகள் முருக இசக்கி, ரமேஷ்குமார், மார்கின் ராபர்ட், சிவக்குமார், சிவலிங்கம், சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

