ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.
ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் வி.சுபாசினி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மற்றும் செயலாளர் HGF A. ஆயிஷா இப்ராஹிம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். துனை தலைவர் மேலாண்மை HGF A. மதுமிதா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நகரின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் பிரதான இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும், ஜூனியர் ஜேய்சீஸ் தலைவர் Jclt W. நிவேதா சுந்தரி மற்றும் செயலாளர் Jclt A. மித்ரிகா ஆகியோரும் அவரது குழுவினருடன் கலந்து கொண்டனர். போதை பொருளை விட்டு விலகி இருங்கள், போதை பழக்கம் நம் கனவுகளை அழித்து விடும், மேலும், குழந்தைகள் பெரியவர்களுக்கு கூறுவது போலவும் வாசகங்கள் உள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

