• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று விநியோகம்

policeseithitv by policeseithitv
January 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று விநியோகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தூத்துக்குடி வட்டாரத்தில் 2022-23ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது குமாரகிரி, தளவாய்புரம், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கள்பட்டி ஆகிய 6 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு துறைகளின் மூலம் மானியத் திட்டங்கள் ஒரே பஞ்சாயத்தில் நடைமுறைபடுத்திட ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை- உழவர்நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தரிசுநிலங்கள் 10 முதல் 15 ஏக்கர் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில் விளைநிலமாக மாற்றுவதை ஊக்குவித்தல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் வழங்குதல், தென்னங்கன்று வழங்குதல், திரவ உயிர் உரம் விநியோகம், விசைத் தெளிப்பான் விநியோகம் மற்றும் இதர வேளாண் உழவர் நலத்துறை மானியத் திட்டங்களும் இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகின்றது.

இதில் ஒரு பகுதியாக மேலத்தட்டப்பாறை கிராமத்தில் குடும்பம் ஒன்றுக்கு தென்னங்கன்றுகள் இரண்டு (முழு மானியம்) வீதம் 300 குடும்பங்களுக்கு வழங்க இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் அவர்கள் துவக்கிவைத்து 15க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்னங்கன்று நடுதல் மற்றும் பராமரிப்பு குறித்த தொழில்நுட்ப துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேலத்தட்டப்பாறை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான் 50 சத மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் மேலத்தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சிவசண்முகம், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.

Next Post

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In