வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.
வேதாரணியம் ஜனவரி 5
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ,
நாகப்பட்டினம் வனஉயிரினன் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி
வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான், தலைமையில் வனவர்கள் ராமதாஸ், சதீஷ்குமார், வனக்காப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் நேற்று மாலை துளசியாபுரம் பகுதிகளில் உள்ள மரங்களில் மடையான் பறவைகளை கெல்டா பில்ட் வை அடித்து பிடித்த திருத்துறைபூண்டி வீர நகரை சேர்ந்த கார்த்தி த/பெ மதி, பாண்டியன் த/பெ சங்கர்,
பாண்டியா த/பெ துரை ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப் பாதுகாப்பு சட்டபடி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரிக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி அபராதமாக இணக்க கட்டணம் ௹ 23,000/= வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

