நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 5
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை 2022-23 அறிவிப்புகளின் படி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி “உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி – மரபு சார் கண்காட்சி நடத்திட தெரிவிக்கப்பட்டு அதன் படி 05.01.2023 வியாழக்கிழமை சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை சாகுபடி செய்து வரும் மற்றும் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள, சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் அனுபவமுள்ள முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றிட உள்ளார்கள். மேலும் பாரம்பரிய உயர்தர உள்ளுர் இரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் விநியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூயமல்லி, கருப்பு கவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது பூங்கார் பாரம்பரிய நெல் ரகம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் (1 கிலோ ரூ.12.5) வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அட்மா மாநில திட்டகுழுத் தலைவர் மகா.குமார் கீழ்வேளுர் அட்மா வட்டாரக்குழு தலைவர் ப.கோவிந்தராஜன் வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) த வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார். விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

