நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
ஜனவரி 3
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், சமூக சீர்திருத்த துறை, அரசு செயலாளர் த.ஆபிரகாம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், சமூக சீர்திருத்த துறை, அரசு செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 09.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு நவம்பர் மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 05.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்றாவது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


மேலும், இதில் 09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெறப்பட்ட பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6, நீக்கலுக்கான படிவம்-7, திருத்தலுக்கான படிவம்-8 ஆகியவற்றின்படி நாகப்பட்டினத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. அவற்றில் இன்றைய தேதிப்படி மொத்தம் 5,58,930 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,72,650 ஆண்களும், 2,86,258 பெண்களும், இதர வகுப்பினர் 22 பேர்களும் உள்ளனர். அதனை தொடர்ந்து, 05.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது என வாக்காளர் பட்டியல் பார்வையாளர், சமூக சீர்திருத்த துறை, அரசு செயலாளர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பாக வரப்பெற்ற புதிய வாக்காளர் படிவங்களின் உண்மைத் தன்மை குறித்து விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கே சென்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம், மற்றும் திருக்குவளை வட்டாட்சியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

