தூத்துக்குடி டிச, 25
நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தூத்துக்குடியில் உள்ள நாம் இந்தியர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என்பி ராஜா அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கட்சியின் பொருளாளர் பேருரணி து. ஜெயகணேஷ் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார், இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட பொருளாளர் சங்கரன், மாணவரணி ஒன்றிய செயலாளர் சுயம்புலிங்கம் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் உடையார் மற்றும் ஒன்றிய செயலாளர் சரவணன், சின்னத்துரை, சேசு ராஜேந்திரன் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, சாயர்புரம் நகர செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்., இதைத்தொடர்ந்து கூட்டாம்புளி , வாகை குளத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது, மேலும் சாயர்புரத்தில் உள்ள இல்லத்திற்கு மதிய உணவுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, மேலும் நிகழ்வில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நாம் இந்தியர் கட்சி தலைவர் என்பி ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் போன்ற நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி தொகுப்பு எம்.ஆத்தி முத்து போலீஸ் செய்தி நியூஸ்

